இந்த மலையாள - பார்ப்பன அதிகார மய்யம் உருவானது எப்படி?

1886 ஆம் ஆண்டு தமிழர்களுக்குச் சொந்த மான முல்லைப்பெரியாறு அணைப் பகுதியை மோசடி யான ஒப்பந்தத்தின்மூலம் தமக்குச் சொந்தமானது என அறிவித்தது திருவாங்கூர் சமஸ்தானம். அப்படி தமிழர் நிலங்களை மலையாளிகள் பறித்துக் கொள்ளக் காரணமானவன் சமஸ்தானத்தின் திவான் இராமையங்கார் என்ற பார்ப்பான்.

முல்லைப்பெரியாறு போன்ற அணைகள், காவிரி, பாலாறு போன்ற ஆறுகளில் தமிழர் களுக்குள்ள உரிமையைப் பறிபோகக் காரணமான மத்திய நீர்வளத் துறையின் முன்னாள் தலைமைச் செயலாளர் பி.இராமசாமி அய்யர் என்ற பார்ப்பான்.

தமிழர்கள் முல்லைப்பெரியாறு அணையின் நீர் இல்லாமல், அந்த அணையின் பாசன வசதி இல்லாமல் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என கட்டுரை வெளியிட்டது தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் ஃப்ரண்ட்லைன் பத்திரிக்கை,. அதன் உரிமையாளர் இந்து நாளேட்டின் உரிமை யாளர் இந்து ராம் ஒரு பார்ப்பான்.

முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சனை உட்பட தமிழகத்தின் அனைத்து ஆற்றுநீர் உரிமைகள் தொடர்பாக அனைத்து முடிவு களையும் எடுக்கும் அதிகாரங்களைக் கொண்டது மத்திய நீர்வளத்துறை. அந்தத்துறை உட்பட பார்ப்பன - இந்திய அரசின் முக்கியமான 30 துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் பார்ப்பன உயர் சாதியினர் எண்ணிக்கை குறித்து மண்டல்குழு அறிக்கை வெளியிட்ட பட்டியல் இதோ. 1980 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிபரம் இதோ.

பிரிவு மொத்தம் SC% BC% பார்ப்பன உயர் ஜாதி

Class I 1,74,043 5.68 4.69 89.63%
Class II 9,12,786 18.18 10.63 71.19%

அதன்பிறகு 2009 ஆம் ஆண்டு மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரத்தையும் பார்ப்போம்.

பிரிவு SC% ST% BC% பார்ப்பன உயர்ஜாதி%

I 12.54 4.85 5.44 77.17
I I 14.9 5.7 3.6 75.8

இந்தியாவின் ஆட்சி அதிகாரம் - பார்ப்பன-பனியாகளிடமே இன்னும் தங்கியுள்ளது. இந்திய தேசியம் என்பது பார்ப்பன-பனியாக்களுக் கானதே என்று பெரியார் உரத்து முழங்கினார். அதன் காரணமாகவே 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி நாட்டுக்கு ‘சுதந்திரம்’ வந்து விட்டது என்று அறிவித்தபோது, பெரியார் ஏற்க மறுத்தார். அதை துக்க நாள் என்றார்.

நாட்டின் முக்கிய நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், தொழில் நி.றுவனங்களில் முழுமை யான அதிகாரம் படைத்த தலைவர்களாக, பார்ப்பனரும் - பனியாக்களுமே இருந்து வரு கிறார்கள். சில முக்கிய நிறுவனங்களின் பட்டியல்.

1. இந்துஸ்தான் யூனிலீவர் - நித்தின் பரான்ஜிபே (பார்ப்பனர்)
2. அய்.சி.அய்.சி.அய். வங்கி - கே.வி. காமத் (பார்ப்பனர்)
3. ஜெய் பிரகாஷ் அசோசியேட் - யோகேஷ் கவுர் (பார்ப்பனர்)
4. எல் அண்ட் டி - ஏ.எம்.நாய்க் (பார்ப்பனர்)
5. என்.டி.பி.சி. - ஆர்.எஸ். சர்மா (பார்ப்பனர்)
6. ஓ.என்.ஜி.சி. - மற்றொரு ஆர்.எஸ். சர்மா (பார்ப்பனர்)
7. ஸ்டேட்பாங்க் ஆப் இந்தியா - ஓ.பி.பட் (பார்ப்பனர்)
8. டாட்டா ஸ்டீல் - பி.முத்துராமன் (பார்ப்பனர்)
9. பஞ்சாப் நேஷனல் பாங்க் - கே.சி. சக்ரபர்த்தி (பார்ப்பனர்)
10. பாங்க் ஆப் பரோடா - எம்.டி. மல்லியா (பார்ப்பனர்)
11. கனரா வங்கி - ஏ.சி. மகாஜன் (பார்ப்பனர்)
12. இன்ஃபோசிஸ்- கிரிஸ். கோபாலகிருஷ்ணன் (பார்ப்பனர்)
13. டி.சி.எஸ். - சுப்பிரமணியன் ராமதுரை (பார்ப்பனர்)
14. ரிலையன்ஸ்குழுமங்கள் - முகேஷ் மற்றும் அனில் அம்பானி (பனியா)
15. பார்த்தி ஏர்டெல் நிறுவனம் - சுனில் மிட்டல் (தலைவர்-பனியா)
16. கிரேசியம் அண்டு ஹிண்டால் கோ - குமார் மங்கலம் பிர்லா (பனியா)
17. எச்.டி.எப்.சி. - தீபக் பரேக் (பனியா)
18. ஸ்டெர்லைப் இன்டஸ்ட்ரிஸ்- அனில் அகர்வால் (பனியா)
19. சன்பார்மா - திலிப் சங்வி (பனியா)

விமானத் துறை
20. சிங். பிஷர் ஏர்லைன்ஸ்- விஜய்மல்லய்யா (பார்ப்பனர்)
21. ஜெட் ஏர்லைன் - நரேஷ் கோயால் (பனியா)

தகவல் தொடர்பு
22. ரிலையன்ஸ்கம்யூனிகேஷன் - அம்பானி (பனியா)
23. ஏர்டெல் - மிட்டல் (பனியா)
24. வோடாஃபோன் எஸ்சார் - டுயா (பனியா)
25. அய்டியா - பிர்லா (பனியா)
26. ஸ்பைஸ்- மோடி (பனியா)
27. பி.எஸ்.என்.எல். - குல்தீப் கோயால் (பனியா)
28. டாட்டாவின் டி.டி.எம்.எல். - கே.ஏ. சவுக்கார் (பார்ப்பனர்)
29. கிரிக்கெட் அமைப்பு - லலித் மோடி (பனியா)

நாளேடுகள்
30. டைம்ஸ்ஆப் இந்தியா - ஜெயின்
31. இந்துஸ்தான் டைம்ஸ்- பிர்லா (பனியா)
32. தி இந்து - கஸ்தூரி அய்யங்கார் குடும்பம் (பார்ப்பனர்)
33. இந்தியன் எக்ஸ்பிரஸ்- கோயங்கா (பனியா)
34. சீ (Zee) டி.வி. - சுபாஷ் சந்திரா கோயல் (பனியா)
35. தைனிச் ஜெக்ரான் (இந்தி நாளேடு) - குப்தா (பனியா)
36. திவ்யா பாஷ்கர் (இந்தி நாளேடு) - அகர்வால் (பனியா)
37. குஜராத் சமாச்சார் (குஜராத்தின் மிகப்பெரும் நாளேடு) - ஷா (ஜெயின்)
38. லோக்மத் - மராத்திய நாளேடு - தார்தா (ஜெயின்)
39. நவபாரத் டைம்ஸ்- கோத்தாரி (ஜெயின்)
40. ராஜஸ்தான் பத்ரிக்கா - கோத்தாரி (ஜெயின்)
41. அமர் உஜ்ஜாலா - மகேஷ்வரி (பனியா)

எஃகு உற்பத்தி
42. இந்துஸ்தான் - பிர்லா (பனியா)
43. எஸ்ஸார் (ஸ்டீல் உற்பத்தி) - ரூயா (பனியா)
44. அர்சிலோர் மிட்டல்- லட்சுமி மிட்டல் (பனியா)
45. இஸ்பெட் - மிட்டல் (பனியா)
46. புஷன் ஸ்டீல் - சிங்கால் (பனியா)
47. விசா ஸ்டீல் - அகர்வால் (பனியா)
48. செய்ல் (அரசு நிறுவனம்) - தலைவர் எஸ்.கே. ரூன்த்தா (பனியா)
49. லியாட் ஸ்டீல் - குப்தா (பனியா)

சிமெண்ட் நிறுவனங்கள்
50. அம்புஜா - நியோட்டியா மற்றும் ஷெச்சாரியா (பனியா)
51. டால்மியா சிமெண்ட் - (பனியா)
52. உட்ட்ராடெக் மற்றும் விக்ரம் சிமெண்ட் - பிர்லா (பனியா)
53. ஜெ.கே. சிமெண்ட் - சிங்காரியா (பனியா)
54. இந்துஸ்தான் மோட்டார் - பிர்லா (பனியா)
55. பஜாஜ் ஆட்டோ - (பனியா)

தீண்டப்படாத மக்களும், மிகவும் பிற்படுத்தப் பட்ட மக்களும் மக்கள் எண்ணிக்கையில் பெரும் பகுதியாக இருக்கிறார்கள். ஆனால், நாட்டின் அதிகார மய்யத்தில் இவர்களைத் தேடிப் பார்த்தாலும் சிக்கவில்லை. மக்கள் வரிப்பணத்தில் பெரும் பகுதியை ராணுவத்துக்கு செலவழித்து, தேச ஒற்றுமை, தேச பக்தி என்றெல்லாம் பேசிக் கொண்டு, இந்திய தேசியத்தை இறுக்கிப் பிடிக்க நடக்கும் முயற்சிகள் எல்லாம் இந்த பார்ப்பனர் பனியாக்களின் சுரண்டலுக்கு தானா?

தமிழ்நாட்டின் உரிமைகளில் கருநாடகமும், கேரளாவும் குறுக்கிடுவதற்கு காரணம் இந்திய தேசியம் அல்லவா? இந்திய தேசியக் கட்டமைப்பு, தேசிய இனங்களை தங்களுக்குள் அடக்கி வைத்திருப்பதால் தானே ‘தடி எடுத்தவன் தண்டல்காரன்’ என்ற நிலை வந்துவிட்டது? நீதிமன்றத் தீர்ப்புகளையே மதிக்காத கேரளத்தையும், கருநாடகத்தையும், ‘இந்திய தேசியம்’ கண்டித்ததா? தண்டித்ததா? பார்வையாளராக மட்டும் வீற்றிருப்பது ஏன்?

இந்திய அரசில் மலையாளிகள் ஆதிக்கம்

இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் பார்ப்பனர் களும், மலையாளிகளும் கொடிகட்டிப் பறக்கிறார்கள். ஈழத்தில் தமிழின அழிப்புக்கான திட்டங்களைத் தீட்டி, சோனியாவின் தலைமையின் கீழ், ரகசியமாக அமுல் படுத்தியது, மலையாள அதிகாரிகள் குழுதான். பார்ப்பனர்களைப் போலவே மலையாளிகளும் எப்போதும் தமிழினத்தைப் பகையாகக் கருதுவோரே! எனவேதான் சோனியா, மலையாளிகளிடம் இந்தப் படுகொலைத் திட்டத்தை ஒப்படைத்தார். மத்திய அரசினை சூழ்ந்து நிற்கும் மலையாள அதிகார வர்க்கத்தின் ஆதிக்கம் அதிர்ச்சி தருவதாக உள்ளது. இதோ, இந்தப் பட்டியலைப் பாருங்கள்:

1.என். பெர்னான்டஸ்(ஜனாதிபதியின் செயலாளர்)
2.வி.கே. தாஸ்(ஜனாதிபதியின் தனிச்செயலாளர்)
3.டி.கே.ஏ. நாயர் (பிரதமரின் முதன்மைச் செயலாளர்)
4.என்.நாராயணன் (பிரதமரின் பிரதானஆலோசகர்)
5.பி. ஸ்ரீதரன் (நாடாளுமன்ற சபா நாயகரின் தனிச் செயலாளர்)
கே.எம். சந்திரசேகர் (அமைச்சரவைச் செயலாளர்)
ருத்ர கங்காதரன் (விவசாயத் துறைச் செயலாளர்)
மாதவன் நம்பியார் (விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர்)
நிருபமா மேனன் ராவ் (வெளியுறவுத் துறைச் செயலாளர்)
சத்திய நாராயணன் தாஸ்(கனரகத் தொழில் துறைச் செயலாளர்)
ஜி.கே. பிள்ளை (உள்துறைச் செய லாளர்)
சுந்தரேசன் (பெட்ரோலியத் துறைச் செயலாளர்)
கே. மோகன்தாஸ்(கப்பல் துறைச் செயலாளர்)
பி.ஜே. தாமஸ்(மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர்)
சிவசங்கர மேனன் (தேசிய பாதுகாப்பு ஆலோசகர்)
சுதா பிள்ளை (திட்டக் கமிஷன் செயலாளர்)
வி.கே. சங்கம்மா (வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சில் செயலாளர்)
ஆர். கோபாலன் (நிதிப்பணிகள் துறை இயக்குநர்)
கே.பி.வி. நாயகர் (செலவீனங்கள் துறைச் செயலாளர்)
கே. ஜோஸ்சிரியாக் (வருவாய்த் துறைச் செயலாளர்)
ஆர். தாமஸ்(வருமான வரித்துறைச் செயலாளர்)
வி. ஸ்ரீதர் (சுங்கத் துறைச் செயலாளர்)
பி.கே.தாஸ்(அமலாக்கப்பிரிவு சிறப்பு இயக்குநர்)
ஏ.சி. ஜோஸ்(கதர் வாரியம்)
சி.வி. வேணுகோபால் (பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர்)
ஸ்ரீகுமார் (இயக்குநர், மத்திய கண்காணிப்பு ஆணையகம்)

சோனியா வீட்டில் வேலைபார்ப்பவர்களில் 50 பேர் மலையாளிகள்தான். இப்படி நாட்டின் கேந்திரமான நிர்வாகப் பகுதிகளை கேரளக் காரர்கள் ஆக்கிரமித்திருக் கிறார்கள். நாட்டின் 30 பெரிய மாநிலங்களில் மிகச் சிறிய மாநிலம் கேரளா. ஆனால் மத்திய அரசுத் துறை செயலாளர்கள் 53 பேரில் 19 பேர் அதாவது 33 விழுக்காட்டிற்கு மேலானவர்கள் கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள்.

சக்தி வாய்ந்த ‘மலையாள அதிகார மய்யத்தை’ உருவாக்கி, ஈழத் தமிழர்களின் இனப் படுகொலைக்கு திட்டங்களை வகுத்து செயல் பட்டது யார்? இந்திய தேசியப் பார்ப்பன ஆட்சி அல்லவா? கேரளத்துக்காரனும் கன்னடத்துக் காரனும் இந்திய தேசியப் பாதுகாப்பு இருப்பதால் தானே தமிழர்கள் உரிமையைப் பறிக்கிறான் என்பதை புரிந்து கொள்ள வேண்டாமா? இந்த மலையாள - பார்ப்பன அதிகார மய்யம் உருவானது எப்படி? இதோ தோழர் பெரியார் விளக்குகிறார்.

“மலையாளிகளின் தொல்லையே மாபெரும் தொல்லையாகும். அவர்கள் பெரும் பாலும் ஆரியக்கலாச்சாரத்தையும், ஆரிய மொழி யையும், ஆரிய வர்ணச்சிரம தர்மத்தையும் ஆதரிக்கிறவர்கள், அதனால் வகுப்புவாரி உரிமையில் மலையாளிகளை பார்ப்பனரல்லாத இந்துக்கள் என்கின்ற பிரிவில் பார்ப்பனர்கள் சேர்த்துக்கொண்டு பார்ப்பனரல்லாதார் என்கிற கணக்கில் ஏராளமான மலையாளிகளுக்கு கொடுப்பதையே - அவர்கள் தாராளமாக வந்து புகுவதையே பார்ப்பனர்கள் ஏற்றுக்கொள் கிறார்கள் - அனுமதிக்கிறார்கள். அதன் காரணத் தால் ஏறக்குறைய பார்ப்பனரில்லாத பெரும் பதவிகளிலும் மலையாளிகளே அமர்த்தப் பட்டிருக்கிறார்கள்.”

தோழர் பெரியார் - விடுதலை 17.09.1954

முல்லைப்பெரியாறு, காவிரி, பாலாறு போன்ற தமிழ்நாட்டு ஆற்றுநீர் உரிமைகள் உட்பட அனைத்து உரிமைகளையும் மீட்க, இந்திய தேசியத்துக்கு நெருக்கடி கொடுக்கும் வகையிலான போராட்டங்களை முன்னெடுங்கள். பெரியாரைப் போல, பெரியார் காலத்தைப் போல இந்திய தேசியக் கொடி எரிப்பு, இந்திய யூனியன் வரைபட எரிப்பு, இந்திய அரசியல் சட்ட எரிப்பு போன்ற போராட்டங்களை அறிவியுங்கள். இந்திய தேசியம் அலறுவதில் தான் தமிழர் உரிமை மலரத் தொடங்கும். பார்ப்பன - இந்திய தேசியத்தையும் அதைத்தாங்கிப் பிடிக்கும் தூண் களையும் அம்பலப்படுத்துவோம்!
ஆதாரம் : 29.10.2009, 23.06.2011 பெரியார் முழக்கம்

ஆணும் ஆணும் கூடினால் அய்யப்பன் வருவானா? எய்ட்ஸ் வருமா?

பத்மாசூரன் என்கிற அசுரன், சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். சிவன் அவன் முன் தோன்றி `உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்’ என்றான் அதற்கு பத்மாசூரன் `நான் யார் தலையில் கை வைக்கின்றேனோ அவன் எரிந்து சாம்பலாகும்படி யாக வரம் அளித்தருள வேண்டும்’ என்றானாம்.

சிவனும் `அவ்வளவுதானே! அளித்தேன் போ!’ என்று கூறலானான். பத்மாசூரனுக்கு ஓர் சந்தேகம் உண்டாயிற்று. சிவன் அளித்த வரமானது உண்மைதானா? பலிக்குமா? என்று சோதனை செய்ய எண்ணினான். உடனே அவன் சிவன் தலையிலேயே கை வைத்துச் சோதிக்க முற்பட்டான். சிவன் பயந்து போய் பல இடங் களுக்கும் ஓடினான். பத்மாசூரன் விட்டபாடில்லை. பிறகு விஷ்ணுவிடம் அலைந்து சென்று, தாம் முட்டாள்தனமாக அளித்த வரத்தினைப் பற்றியும், பத்மாசூரன் தன் தலையில் கை வைக்க விரட்டி வருவது பற்றியும் கூறி, அதற்குப் பரிகாரம் தேடித் தன்னைக் காக்கும்படி வேண்டினான்.

அதற்கு விஷ்ணுவானவன் `அதுதானா பிரமாதம் இதோ ஒரு நொடிப் பொழுதில் அவனை ஒழித்துவிட்டு வருகின்றேன்.’என்று கூறி அழகிய மோகினிப் பெண் உருவம் எடுத்து பத்மாசூரன் முன் சென்று நின்றான். அந்த மோகினிப்பெண்ணைக் கண்ட அசுரன் அவளை கட்டி அணைக்க எத்தனித்தான். அதற்கு அவள் நான் உனக்கு உடன்படுகின் றேன். ஆனால் ஒரு நிபந்தனை. நீ மிகவும் அழுக்காய் இருக்கின்றாய். எனவே நீ அருகில் உள்ள நீர் நிலையில் இறங்கிக் குளித்து விட்டுவா என்று கூறினாள்.

அதன்படியே பத்மாசூரன் தண்ணீரில் இறங்கிக் குளிக்கும் போது தம் தலையில் கைவைத்துத் தேய்த்துத் தண்ணீரில் மூழ்கி எழ முற்பட்டான். அவனது கை அவனது தலையில் பட்டவுடனே அவன் தலை எரிந்து மடியலானான். விஷ்ணு சிவனிடம் சென்று பயத்தை விட்டு வெளியே வாருங்கள் நான் அவனைப்பெண் வேடம்எடுத்துக் கொன்று விட்டு வந்துவிட்டேன் என்று கூறினான்.

அதற்கு சிவன், `எப்படிப் பெண்வேடம் போட்டு சென்றாய்? அந்த வேடத்தை எனக்குக் கொஞ்சம் காட்டுங்கள்’ என்றான் விஷ்ணு தான் போட்டுச் சென்ற பெண் வேடத்தைப் போட்டுக் காட்டினான் . அதனைக் கண்ட சிவனானவன், விஷ்ணுவாகிய மோகினிமீது மையல் கொண்டு கட்டியணைக்க முற்பட்டான். ஒருவருக்கு ஒருவர் துரத்திக் கொண்டு ஓட இருவருக்கும் ஆடைகள் நெகிழ்ந்துவிட இருவரும் கலவி செய்தனர். உடனே ஓர் குழந்தை பிறந்தது. அதனைச் சிவன் கையில் தாங்கினானாம். அந்தக் குழந்தை கையில் பிறந்ததனால், கையனார் என்று அழைக்கப்பட்டு, பிறகு அய்யனார் என்றும், அய்யப்பன் என்றும் ஆனது.

இப்படி அரிக்கும் சிவனுக்கும் பிறந்த பிள்ளையாதலால், அய்யனார் அல்லது அய்யப்பனை ஹரிஹரன் என்றும் அழைப்ப துண்டு. எனவே இந்தப் பிறப்புப் பற்றிக் கூறப்படும் கதையோ நல்லறிவும். நல்லொழுக்கமும் உடையோர் கேட்கவும் மனம்கூட வெட்கப்படவேண்டியதாம். இயற்கைவிபரீத நடத்தை வர்ணனை, ஆணுக்கு ஆண் கூடிப் பிறந்தவனாம் இவன் . இதை இயற்கை ஒப்புமா? மற்ற எந்த ஜீவராசிகளும் இப்படி நடப்பதில்லையே.

- தோழர் பெரியார் - இந்து மதப்பண்டிகைகள் நூல்

இப்படி ஒரு அறிவுக்குப் பொருந்தாத கதையை நம்பி இக்கதையின் நாயகனை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள்,

விவசாயம் பண்ண தண்ணி தராத கேரளாக்காரனுக்கு, செக் போஸ்ட், பெர்மிட், போலீஸ் மாமுல் எந்த செலவுமே இல்லாம பக்தியின் பேரால் தலைக்கு 2 கிலோ அரிசி, 2 தேங்காய், 1 கிலோ நெய் எல்லாவற்றையும் தலையிலேயே செமந்து கொண்டு போய் கொட்டுகிறார்கள். கூடவே கொஞ்சம் உண்டியல் காசு. ஆண்டுக்கு கேரளாவுக்கு 400 கோடி வருமானமாம். மலையாளிக்கு அரிசியையும் நெய்யையும் 400 கோடியையும் கொடுத்துவிட்டு திரும்பி வரும் வழியில் பழனியில் தலையில் மிச்சமிருக்கும் மயிரையும் கொடுத்துவிட்டு, கடைசிச் சாங்கியத்தை டாஸ்மாக்கில் முடித்துவிட்டு இந்த ஆண்டுக்கான தன் ஆன்மீகப் பணியை நிறைவு செய்கிறார்கள். பகுத்தறிவற்ற இன உணர்வு விடுதலையைப் பெற்றுத்தராது என்றார் பெரியார். அதை உறுதியாக்கும் அய்யப்ப மற்றும் அனைத்து வகை பக்தர்களுக்கும் நன்றி.

மீடியாவுக்கு பயமில்லை : மார்கண்டேய கட்ஜு


புதுடெல்லி : பத்திரிகைகளும் டெலிவிஷன் சேனல்களும் செயல்படும் விதம் குறித்து முன்னாள் நீதிபதியும் தற்போதைய பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ள கருத்துக்கள் மீடியா வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சி.என்.என் & ஐபிஎன் சேனலில் கரன் தாப்பர் நடத்தும் டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது கட்ஜு கூறிய விஷயங்கள் சர்வதேச அளவில் பத்திரிகையாளர்களின் கடும் விமர்சனத்துக்கு இலக்காகியுள்ளது. அந்த கேள்வி & பதில் நிகழ்ச்சியின் முக்கியமான பகுதிகள் இங்கே:

கரன் தாப்பர்: சமீபத்தில் சில பத்திரிகை மற்றும் டீவி ஆசிரியர்களை சந்தித்தபோது, ‘மீடியா பொறுப்பில்லாமல் செயல்படுகிறதுஎன்று வருத்தப்பட்டீர்கள். மீடியாவின் செயல்பாடு உங்களுக்கு ஏமாற்றம் தருகிறதா?

மார்கண்டேய கட்ஜு: ரொம்ப ஏமாற்றம் அளிக்கிறது.

உங்களுக்கு மீடியா பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லையா?

நிச்சயமாக இல்லை.

உண்மையாகவா சொல்கிறீர்கள்?

உண்மையாகவே எனக்கு மீடியா பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை. மக்கள் நலனுக்காக மீடியா பணியாற்ற வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி இல்லை. சில நேரங்களில் மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுவதையும் பார்க்கிறேன்.

உண்மையான தகவல்களை பாரபட்சம் இல்லாத முறையில் வழங்குவது மீடியாவின் கடமை என்று அந்த சந்திப்பில் குறிப்பிட்டீர்கள். மீடியா நேர்மையாக செயல்படவில்லையா, அல்லது அது போதுமானதாக இல்லையா?

ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் வரலாற்றில் ஒரு மாற்றம் நேர்ந்து கொண்டிருக்கிறது. நில பிரபுத்துவ வேளாண் சமூகமாக இருந்த இந்தியா இன்றைக்கு நவீன தொழில்சார் சமுதாயமாக மாறும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். இது வலிகள் மிகுந்த காலகட்டம். முன்பு ஐரோப்பா இதே மாற்றத்தை சந்தித்த நேரத்தில், மக்களுக்கு அந்த வலியை குறைக்கும் வகையில் அங்குள்ள மீடியா செயல்பட்டது.

இந்தியாவில் அப்படி நடக்கவில்லை என்கிறீர்களா?

இங்கே அதற்கு தலைகீழாக நடக்கிறது. ஐரோப்பாவில் ரூசோ, தாமஸ் பய்ன், திதரோ மாதிரி எழுத்தாளர்கள் மக்களை மாற்றத்துக்கு தயார் செய்தார்கள். இந்த நாட்டிலுள்ள கடைசி சாமியாரின் குடலை உருவி அதை கடைசி மன்னனின் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கவிடும் வரையில் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்காதுஎன்று முழங்கினான் பிரஞ்சு சிந்தனையாளன் திதரோ.

அவர்களோடு ஒப்பிட்டால் இந்தியாவின் வரலாற்று மாற்றத்துக்கு நமது மீடியாவின் பங்களிப்பு எப்படி?

இந்திய மீடியா பெரும்பாலான நேரங்களில் மக்களுக்கு எதிரான நிலை எடுப்பதை பார்க்கிறேன். மூன்று விஷயங்களை உதாரணம் காட்டலாம். முதலாவது, பற்றி எரியும் உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை மீடியா திசை திருப்புகிறது. இங்கே பிரச்னைகள் எல்லாமே பொருளாதார அடிப்படையிலானவை. நம் மக்களில் இன்னமும் 80 சதவீதம் பேர் வறுமை, வேலையின்மை, விலைவாசி, நோய்களால் பாதிக்கப்பட்டு வாழ்க்கை நடத்துகின்றனர். அந்த பிரச்னைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து தீர்வு காண தூண்டாமல், பிரச்னைகளில் இருந்து திசை திருப்புகிறது மீடியா. சினிமா நட்சத்திரங்கள், அழகி போட்டி, கிரிக்கெட் மாதிரியான சமாசாரங்களை பெரிதுபடுத்தி நாட்டுக்கு அத்தியாவசியமானது அந்த விஷயங்கள்தான் என்பதுபோல் ஒரு பிரமையை உண்டாக்குகிறது.

ஃபேஷன், சினிமா, கிரிக்கெட் மேட்டரை மக்களுக்கு போதையேற்ற மீடியா பயன்படுத்துகிறது என்கிறீர்கள்?

ஆமாம். கிரிக்கெட் நமது ஜனங்களுக்கு ஒரு போதை பொருள் & ஓப்பியம் & மாதிரி. ரோமாபுரி பேரரசன் சொல்வானாம், ‘மக்களுக்கு ரொட்டி கொடுக்க வழியில்லை என்றால் சர்க்கஸ் பார்க்க ஏற்பாடு செய்என்று. இந்தியாவில் மக்களுக்கு தேவையானதை கொடுக்க முடியாவிட்டால் அவர்களை கிரிக்கெட் பார்க்க வைக்கிறோம். நிறைய சேனல்களில் இரவு பகல் எந்த நேரமும் ஏதாவது கிரிக்கெட் மேட்ச் ஓடிக் கொண்டே இருக்கிறது & அதுதான் நாட்டின் ஒரே பிரச்னை மாதிரி.

மக்கள் விரோதமாக மீடியா செயல்படுவதை காட்டும் இன்னும் இரண்டு விஷயங்கள் என்னென்ன?

இரண்டாவது, அநேக நேரங்களில் மக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. இங்கே பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். ஒருவரை ஒருவர் மதித்தால்தான் ஒற்றுமையாக நிம்மதியாக வாழ முடியும். ஆனால் என்ன நட க்கிறது? ஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் குண்டு வைத்தது நாங்கள்தான் என்று இந்தியன் முஜாஹிதின் கூறுகிறதுஅல்லது ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறதுஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன. அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள். எஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும். யாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது? முஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா. எந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.

மீடியா இந்த விஷயத்தில் கேர்லசாக நடக்கிறது, தகவல் உண்மையா என்பதை செக் பண்ணாமல் செய்தி வெளியிடுகிறது என்கிறீர்களா அல்லது வேண்டுமென்றே அப்படி செய்வதாக நினைக்கிறீர்களா?

மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன். நிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.

மீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்?

குண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்தது என்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்?

மீடியாவின் மக்கள் விரோத நிலைப்பாடுக்கு மூன்றாவது உதாரணமாக எதை சொல்ல போகிறீர்கள்?

ஒரு ஃபியூடல் சொசைட்டி மாடர்ன் சொசைட்டியாக மாறுகிற காலகட்டத்தில் அந்த மக்களும் நாடும் முன்னேற்ற பாதையில் செல்வதற்கு அறிவியல் சிந்தனை பரவ வேண்டும். அதற்கு மீடியா உதவ வேண்டும். ஐரோப்பாவில் நடந்ததை சொன்னேன். இங்கே என்ன நடக்கிறது? அறிவியல் சிந்தனையை தூண்டுவதற்கு பதில் ஜோசியம், மூடநம்பிக்கை போன்ற அறிவியலுக்கு எதிரான விஷயங்களை பரப்புகிறது மீடியா. ஏற்கனவே நமது நாட்டில் 80 சதவீத மக்கள் ஜாதி, மதம், மூடநம்பிக்கை போன்ற விஷயங்களில் சிக்கி மனரீதியாக பின்தங்கி நிற்கிறார்கள். அவர்களை அந்த மாயைகளில் இருந்து விடுவித்து ஒரு மேம்பட்ட சிந்தனை வட்டத்துக்கு கொண்டுவர, முற்போக்கான எண்ணங்கள் உருவாக மீடியா தூண்டுதலாக இருக்க வேண்டுமா, வேண்டாமா? ஆனால் மக்களை இன்னும் மடையர்களாக்கும் வேலையை நமது மீடியா செய்கிறது. பல சேனல்களில் பெரும்பாலான நேரம் ஜோசியம் ஓடுகிறது. இன்றைக்கு நீங்கள் இந்த கல் மோதிரம் போட வேண்டும், இன்ன கலர் சட்டை அணிந்தால் நீங்கள் இறங்கும் காரியம் வெற்றி என்றெல்லாம் அபத்தமாக சொல்லி மக்களின் மூளையை மழுங்கடிக்கிறார்கள். என்ன பேத்தல் இது!

ஆக, மீடியா என்ன செய்ய வேண்டும் என சமுதாயம் எதிர்பார்க்கிறதோ அதை செய்யவில்லை என்கிறீர்கள். தன்னை நம்பிய இந்தியாவை மீடியா கைவிட்டு விட்டதாக எ டுத்துக் கொள்ளலாமா?

ஒரு பெரிய சமுதாய மாற்றத்தில் மீடியாவின் பங்களிப்பு அபாரமானதாக இருக்க வேண்டும். ஏனென்றால் மீடியா என்பது ஏதோ சாமான் உற்பத்தி செய்து சந்தையில் விற்கும் சாதாரணமான பிசினஸ் கிடையாது. அறிவு சம்பந்தப்பட்டது. சிந்தனை சம்பந்தப்பட்டது. மக்களுக்கு அறிவியல் அடிப்படையிலான புதிய சிந்தனைகள் உருவாக தூண்டுகோலாக செயல்படும் புனிதமான பணி மீடியாவுக்கு தரப்பட்டிருக்கிறது. அந்த பொறுப்பை அது செய்ய தவறினால் நாட்டை மக்களை கைவிட்டு விட்டதாகத்தானே அர்த்தம்?

இந்தியாவை இன்னும் மோசமாக்குகிறது மீடியா என்றா சொல்கிறீர்கள்?

அதுதான் என் மதிப்பீடு. ஒரு ஜோசியர் உட்கார்ந்துகொண்டு இது அந்த ராசி, அது அணிந்தால் உங்களுக்கு ராசிஎன கதை அளந்துகொண்டிருப்பதை எத்தனை சேனல்களில் பார்க்கிறோம்.

செய்தியை சரியாக சொல்வதில்லை; உண்மைகளை இஷ்டத்துக்கு திரித்து கூறுகிறது; கருத்தையும் வார்த்தைகளையும் வெட்டி ஒட்டி வேறு அர்த்தம் கொடுக்கிறதுஎன்பது மீடியா பற்றிய மக்களின் எண்ணம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அதேதான் என் கருத்தும். 2009 தேர்தலில் பார்த்தோம். முன்னெல்லாம் செய்தியாளர்கள் வேட்பாளரை பார்த்து, ‘எனக்கு பத்தாயிரம் கொடு; உனக்கு சாதகமாக செய்தி போடுகிறோம்என்று பேரம் பேசினார்கள். அதை பார்த்து பத்திரிகை உரிமையாளர்களுக்கு வேறு ஐடியா உதித்தது. நாம்தான் சம்பளம் கொ டுக்கிறோமே, செய்தியாளர்கள் இப்படியும் சம்பாதிக்க ஏன் இடமளிக்க வேண்டும்? நாமே சம்பாதிக்கலாமே?‘ என்று முடிவு செய்து, ‘ஒரு கோடி கொடுங்கள், நான் ஒரு பேக்கேஜ் தருகிறேன்என்று டீல் போடுகிறார்கள். ஒரு பத்திரிகையில் ‘‘வேட்பாளர் அமோக வெற்றி பெறுவார்‘‘ என்ற செய்தி மேலே; ‘‘அவருக்கு டெபாசிட் போய்விடும், ‘பிதான் ஜெயிப்பார்‘‘ என்று கீழே முதல்பக்கத்திலேயே பிரசுரமான விசித்திரத்தை பார்த்தோம். கண்ணை விற்று சித்திரம் வாங்கும் வேலை.

இந்த மாதிரி பிரச்னைகளுக்கு தீர்வு காண நீதிபதி வர்மா தலைமையில் நியூஸ் பிராட்காஸ்டர்ஸ் அசோசியேஷன் அமைத்து சுயமாக சில கட்டுப்பாடுகளை கொண்டுவர முயற்சி செய்தார்கள்...

அதில் எந்த பலனும் ஏற்பட்டதாக தெரியவில்லையே. நீங்கள் தொழில் நடத்துவது ஏழைகள் வாழும் நாட்டில்; அதனால் அவர்களுடைய பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்தாக வேண்டும்; அதை விடுத்து லேடி காகா வந்துவிட்டார்.. கரீனா கபூர் தனது மெழுகு சிலையை மிகவும் சிலாகித்தார்..இதெல்லாமா முக்கிய செய்தி ஆவது?

மீடியா ஏன் மாறவில்லை என நினைக்கிறீர்கள்?

அவர்களுக்கு எந்த பயமும் இல்லை. அது ஒரு காரணம். கொஞ்சமாவது பயம் இருக்க வேண்டும். தப்பு செய்தால் தண்டனை நிச்சயம் என்ற பயம்.

அதற்கு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்?

பத்திரிகைகளை மட்டும்தான் பிரஸ் கவுன்சில் இப்போது கேள்வி கேட்க முடியும். பிரஸ் கவுன்சில் பெயரை மீடியா கவுன்சில் என மாற்றி டீவி சேனல்களையும் அதன் வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். சொல்லி திருந்தாத மீடியா நிறுவனத்துக்கு அரசு விளம்பரங்களை நிறுத்துவது; லைசென்ஸை குறிப்பிட்ட காலத்துக்கு முடக்கி வைப்பது போன்ற தண்டனை அளிக்க அந்த கவுன்சிலுக்கு அதிகாரம் வேண்டும். பிரதமருக்கு எழுதியிருக்கிறேன்.

அது பத்திரிகை சுதந்திரத்தை பாதிக்கும் என்பார்களே?

ஜனநாயகத்தில் எல்லோரும் மக்களுக்கு பதில் சொல்ல கடமை பட்டவர்கள். எந்த சுதந்திரமும் எல்லையில்லாதது அல்ல. சில கட்டுப்பாடுகள் இருந்தாக வேண்டும். மீடியா இதை உணர்ந்து கொண்டால் நாட்டுக்கு நல்லது.

மீடியாவை உங்களுக்கு சுத்தமாக பிடிக்காது போலிருக்கிறதே?

நான் ரொம்பவும் மதிக்கிற சில மீடியாகாரர்களும் இருக்கிறார்கள். உதாரணமாக சாய்நாத்தை சொல்லலாம். அவர் மேல் எனக்கு ரொம்ப மரியாதை உண்டு. விவசாயிகள் தற்கொலை பற்றி நிறைய எழுதியிருக்கிறார். ஆனால் அப்படிப்பட்ட ஆட்கள் குறைவு. பெரும்பாலான செய்தியாளர்கள் அரைகுறையாகத்தான் இருக்கிறார்கள். எகனாமிக் தியரி, பொலிடிகல் சயின்ஸ், லிட்டரேச்சர், ஃபிலாசபி போன்ற விஷயங்களில் ஆழ்ந்த அறிவு இல்லாதவர்கள்.

நன்றி - தினகரன் நாளிதழ் 02.11.2011

http://www.dinakaran.com/News_detail_2011.asp?Nid=8082

நாம் தமிழர் கட்சி, சமுதாயத்தைப் பின்னோக்கி இழுக்க வேண்டாம்!


நாம் தமிழர் கட்சியின் கலை இலக்கியப் பண்பாட்டுப்பாசறையின் சார்பாக இன்று ஒரு அறிவிப்பை கண்டோம். தமிழர் எழுச்சி வாரம் என்று ஒரு வாரத்தை நாம் தமிழர் கட்சி கொண்டாடுகிறது. அதன் திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் பெண்களுக்கிடையேயான கோலப்போட்டிநடத்தப்போவதாகவும், அதில் வெற்றி பெறுவோர்க்கு கீழ்வேளூரில் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் சீமான் அவர்கள் பரிசினை வழங்க உள்ளதாகவும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

50 ஆண்டுகளுக்கு முன்பே க்ராப் வெட்டிக்கொள்ளும் பெண்களுக்கு பரிசு அறிவித்தவர் பெரியார். 25 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கான சைக்கிள்போட்டி நடத்தியது திராவிடர் கழகம். கேப்டன் மாலதி படையணி, மேஜர் சோதியா படையணி என்று பெண்களுக்கான படைப்பிரிவுகளை உருவாக்கி ஆண்களுக்கு நிகராக எதிரிளோடு களமாடச் செய்தவர் தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன். ஆனால் தமிழ்தேசியத்தை இலக்காகக் கொண்டுள்ளதாக அறியப்படும் நாம் தமிழர் அமைப்பின் கலை இலக்கியப் பண்பாட்டுப்பாசறை இப்படி ஒரு கோலப் போட்டியை நடத்துகிறது. தமிழ்தேசியர்கள் விரும்பும் பண்பாடு, பெண்ணடிமைக்கு காவல் அரணான இந்துத்துவப் பண்பாடுதானா? திராவிடர் இயக்கம் இந்துத்துவப் பண்பாடுகளுக்கு எதிராக, பெண்விடுதலைத் தளத்தில் ஆற்றிய பணிகளை அறியாமல் திராவிடத்தால்தான் தமிழினம் கெட்டது என்று எந்த வரலாறையும் தெரிந்துகொள்ளாமல் பேசிக்கொண்டிருக்கும் எந்த இயக்கமும் சாராத நண்பர்களுக்கும், கோலப்போட்டியை நடத்தஉள்ள நாம் தமிழர் கட்சி தோழர்களுக்கும் சில வரலாற்றுத் தகவல்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்ட பெரியாரின் விடுதலைப்பெண்என்ற நூலில் இருந்து சில பக்கங்கள்...

சுயமரியாதை இயக்க மாநாடுகள் - போராட்டங்களில் பெண்களுக்கு முன்னுரிமை

சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய அம்சம் - அந்த இயக்கம் நடத்திய மாநாடுகளாகும். மாநில அளவிலும் - மாவட்ட அளவிலும் இத்தகைய மாநாடுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்துள்ளன. கொள்கை முழக்கங்களோடு ஊர்வலம் - சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளை விளக்கிடும் நீண்ட பேருரைகள் - பல்வேறு அரசியல், சமூக நிகழ்வுகள் குறித்த விரிவான தீர்மானங்கள் ஆகியவை இந்த மாநாடுகளின் தனிச்சிறப்புகள் பெண்களின் பிரச்சனைகளைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்யவும் பெண்களைப் பொதுவாழ்வில் பங்கெடுக்க ஊக்கப்படுத்தவும் இந்த மாநாடுகளை சுயமரியாதை இயக்கம் தொடர்ந்து பயன்படுத்தி வந்திருக்கிறது. முதல் சுயமரியாதை இயக்க மாநில மாநாடு 1929 இல் சென்னை அருகே செங்கல்பட்டில் நடந்தது. ( நூல் - நமது குறிக்கோள் ) மாநாட்டில் சைமன் கமிஷன், சாதிய ஒடுக்குமுறை, மத நிறுவனங்களின் சுரண்டல் பற்றி பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதோடு, திருமணம் மற்றும் மதச்சடங்குகள் பற்றி விசேட கவனம் செலுத்தி இந்த மாநாடு பரிசீலித்தது. அது தொடர்பாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆணூக்கும் பெண்ணூக்கும் சொத்தில் சம உரிமை வேண்டும் என்பது தீர்மானங்களில் ஒன்று.

இரண்டாவது சுயமரியாதை மாநாடு 1930 இல் ஈரோட்டில் நடந்தது. ( நூல் - நமதுகுறிக்கோள் ) அதே மாநாட்டு அரங்கில் இளைஞர்கள் மாநாடும் - பெண்கள் மாநாடும் தனித்தனியாக நடத்தப்பட்டன. பெண்கள் விடுதலைக்கு பெண்களே முன்வர வேண்டும் என்பது பெரியாரின் கொள்கை; அந்த அடிப்படையில் தான் பெண்களுக்கான தனி மாநாடு நடத்தப்பட்டது. பெண்கள் உரிமைக்காக - ஆண்கள் போராட வரமாட்டார்கள் என்பது பெரியாரின் உறுதியான கருத்து. ( தமிழர் தலைவர் . நூல் - சாமி.சிதம்பரனார் )

அந்த மாநாட்டை பெண்களே முழுமையாக முன்னின்று நடத்தினர். 16 வயது வரை பெண்களுக்கு கட்டாயக்கல்வி தர வேண்டும் ; `பால்ய விவாகத் ` தடுப்புச்சட்டத்தைத் தீவிரமாகவும், உடனடியாகவும் அமல்படுத்தவேண்டும்; பெண்களுக்கு ஆண்களைப் போல சம சொத்துரிமை வேண்டும்; பெண்களைக் கோயிலுக்குப் பொட்டுக்கட்டி விட்டு விபச்சாரிகளாக்கும் இழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற தீர்மானங்கள் அதிலே நிறைவேற்றப்பட்டன. ( குடிஅரசு-1930 மே.18 ) பொதுமாநாட்டில் குறுக்கிடாமல் - இந்தப் பெண்கள் மாநாடு தனியாகவே நடத்தப்பட்டது; இளைஞர்கள் மாநாட்டிலும் பெண்ணூரிமைக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இளைஞர்கள் - விதவைகளையும்இ தேவதாசிப்பெண்களையும் திருமணம் செய்ய முன்வர வேண்டும் என்று அந்த மாநாடு அறைகூவல் விடுத்தது. ( நமது குறிக்கோள்.நூல்)

சுயமரியாதை இயக்கத்தின் பெண் தொண்டர்களைக் கொண்டு தனியாகப் பெண்கள் மாநாடு நடத்தப்பட்டாலும் பொது மாநாட்டிலும் பெண்களின் பங்களிப்பு கணிசமாகவே இருந்தது. அதாவது பெண்கள் இயக்கத்தோடு மட்டும் பெண்களை முடக்கிவிட நினைக்கவில்லை. பல நேரங்களில் - மாநாட்டின் முக்கிய கவுரமாகக் கருதப்படும் - மாநாட்டுத் துவக்க உரையை நிகழ்த்தும் பொறுப்புக்களே - பெண்கள் மீது சுமத்தப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்குச் சிலவற்றைக் குறிப்பிடுவோம்.

1. 1931 இல் விருதுநகரில் நடந்த மூன்றவது சுயமரியாதை மாநாட்டை துவக்கி வைத்தவர் இந்திராணி பாலசுப்பிரமணியம் ( குடிஅரசு .1931 ஆக.16 )

2. 1932 இல் நடந்த தஞ்சை மாவட்ட சுயமரியாதை மாநாட்டைதுவக்கி வைத்தவர் டி.எஸ்.குஞ்சிதம். ( குடிஅரசு 1932 ஜீன் 26 )

3. 1933 இல் தஞ்சை மாவட்ட மூன்றாவது சுயமரியாதை மாநாட்டை துவக்கி வைத்தவர் எஸ்.நீலாவதி.

4. 1934 இல் திருச்செங்கோடு தாலுகா ஆதி திராவிடர் மாநாட்டைத் துவக்கி வைத்தவர் ஆர்.அன்னபூரணி.

5. 1937 இல் திருநெல்வேலி மாவட்ட மூன்றாவது ஆதிதிராவிடர் மாநாட்டிற்குத் தலைமை வகித்தவர் மீனாம்பாள் சிவராஜ்.

6. 1938 இல் மதுரையில் நடந்த சுயமரியாதை மாநாட்டைத்துவக்கி வைத்தவர் இராஜம்மாள் .

இந்தப் பெண்கள் - தங்களின் துவக்க உரைகளில் பெண்ணூரிமை தொடர்பான பல்வேறு கருத்தோட்டங்களை முன் வைத்துப் பேசினர். பெண்களின் `மவுனக்` கலாச்சாரத்தைத் தகர்த்தெறிய பெரியார் மேற்கொண்ட முயற்சி இது; இந்த நடவடிக்கைகளால் - சுயமரியாதை இயக்கத்தின் பெண் தொண்டர்கள் உற்சாகமடைந்து - ஆர்வத்துடன் செயல்பட முன்வந்தனர். பேசவே தெரியாத பெண்ணாக இருந்தாலும் சில வார்த்தைகளாவது மாநாட்டு மேடையில் பேசவேண்டும் என்று பெரியார் வலியுறுத்தினார். ( தாராசுரத்தில் இராஜம்மாள் அளித்த பேட்டி 1988 நவம்பர் 21 )

பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி - பெண்களைப் பொதுவாழ்வில் இறக்கிடும் நோக்கத்தோடு சுயமரியாதை இயக்கம் நடத்திய மாநாடுகளின் வெற்றி பற்றி சிங்காரவேலர் இவ்வாறு எழுதினார்.

`` சமையலறைக்குள்ளே மட்டும் முடக்கப்பட்ட பெண்கள் இன்று மேடையேறிப் பேசுகிறார்கள். பொதுமக்கள் பிரச்சனை பற்றி விவாதிக்கிறார்கள் ; ஆண்களோடு சரிநிகர் சமமாக நின்று சமூகத் தொண்டாற்றுகிறார்கள். இதற்கான பெருமைகள் எல்லாம் பெரியாருக்குத் தான் சேரும் ! இந்த இயக்கத்தில் இருப்பது போல் பேச்சாற்றல் மிக்க பெண்களை வேறு இயக்கங்களில்பார்ப்பதுமிகவும் அபூர்வம். கடந்த 50 ஆண்டுகளில் இந்திய தேசியக் காங்கிரஸ் ஒரு சரோஜினி நாயுடுவைத் தான் உருவாக்க முடிந்தது.

... சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்த பெண்களுக்குத் தான் எத்தனை ஆற்றல். பெண்கள் மாநாட்டைத் தனியாகவும்இ உண்மை யான சமத்துவ உணர்வுடனும் அவர்களே நடத்துகிறார்கள். வேறு இயக்கங்களிலே ஆண்களின் நடவடிக்கைகளுக்குப் பின்னால்தான் பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் நம்முடைய இயக்கத்திலோ - பெண்கள் சுதந்திரமான குழுவாகச் செயல்படுகிறார்கள். ஆண்களுடன் சமத்துவத்தைக் காட்டி - இயக்கப்பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.``

( சீ.வி.கே.அமிர்தவல்லியார் - கோலாம்பூரில் - சிங்காரவேலரின் உரையை மேற்கோள் காட்டிப் பேசியது. குடிஅரசு.1940 அக்டோபர் 20 )

1938 இல் சென்னையில் நடந்த முற்போக்கு பெண்கள் சங்க மாநாட்டில் தான் பெரியாருக்கு `பெரியார்` என்ற பட்டத்தைப் பெண்கள் அளித்து கவுரவித்தனர். தென்னாட்டு மக்களின் சமூக சீர்திருத்தத்துக்கு உழைத்த ஈடு இணையற்ற தலைவர் பெரியார் என்று பாராட்டினர். இந்தப் பட்டமே அவர் வாழ்நாள் முழுவதும் அவரது மறைவுக்குப் பிறகும் அவருக்கு நிலைத்துவிட்டது.

சுயமரியாதை இயக்கத்தின் மாநில மாநாடுகளுக்காக அமைக்கப்பட்ட பல்வேறு கமிட்டிகளில் உறுப்பினர்களாக பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். உதாரணமாக - 1931 இல் விருதுநகரில் நடந்த மூன்றாவது சுயமரியாதை மாநாட்டுக் கமிட்டி உறுப்பினராக இந்திராணி பாலசுப்பிரமணியம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1933 ஆம் ஆண்டு ஈரோட்டில் நடந்த சமதர்மக்கட்சி மாநாட்டு உறுப்பினராக எஸ்.நீலாவதி,கே.குஞ்சிதம் ஆகியோர் பிரச்சாரக் கமிட்டி உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிராமங்களில் சுயமரியாதை லீக் குகளை அமைப்பது இவர்களின் பணி . ஆர்.அன்ன பூரணி, இராமாமிர்தம் அம்மாள் போன்றவர்கள் சமதர்மக்கொள்கைப் பிரச்சாரகர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்த பெண்கள் - இப்படி மாநாடு பிரச்சாரப் பணிகளில் ஈடுபடுவதோடு இல்லாமல் போராட்டங்களிலும் தீவிரமாகப் பங்கெடுத்தனர். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட காலகட்டத்தில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது இந்தி எதிர்ப்புப் போராட்டமாகும். 1937 ஆம் ஆண்டு இறுதியில் துவங்கி 1940 துவக்கம் வரை - சுமார் இரண்டாண்டு காலம் இந்தப்போராட்டம் நடந்தது. இந்தியைத் தமிழ்நாட்டுப்பள்ளிகளில் கட்டாயப்பாடமாக்கி - அன்றைய காங்கிரஸ் அமைச்சரவையின் முதல்வர் சி.இராஜ கோபாலச்சாரி உத்தரவு பிறப்பித்திருந்தார்; இந்தப்போராட்டம் தான் சி.இராஜகோபாலாச்சாரியின் உத்தரவைப் பின்வாங்கச்செய்தது.

போராட்டத்தின் துவக்கக் கட்டத்தில் - சுயமரியாதை இயக்கத்தின் பெண் தொண்டர்கள் ஊர்வலங்களிலும் கூட்டங்களிலும் பங்கெடுத்தார்கள். அந்தப் பெண்கள் தங்கள் சேலைகளில் `தமிழ்க்கொடி` யின் படத்தை அச்சிட்டுக்கொண்டு - இந்தி எதிர்ப்பு - தமிழ்வாழ்த்து முழக்கங்களை எழுப்பிக் கொண்டு வந்தது ஊர்வலத்தின் தனிச்சிறப்பு ( தமிழர் தலைவர் . நூல் )

இந்தி எதிர்ப்புக் கூட்டங்களிலும் பெண்கள் பேசினார்கள். உதாரணமாக சென்னை திருவல்லிக்கேணி 1938 செப்டம்பர் 11 ஆம் தேதி நடந்த இந்தி எதிர்ப்புப் படை வரவேற்புக் கூட்டத்தில் இராமாமிர்தம் அம்மையார், நாராயணி அம்மையார், வா.பா.தாமரைக்கண்ணி அம்மையார், முன்னாகர அழகியார் உட்பட பல பெண்கள் பேசினார்கள். இந்தியை எதிர்த்து - திருச்சியிலிருந்து புறப்பட்டு நடந்தே சென்னை வரைப் பிரச்சாரம் - செய்து வந்த இந்தி எதிர்ப்புப் படையை வரவேற்க - இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போராட்டக் களம் நோக்கிச்சென்ற - தங்கள் இயக்கத்தின் ஆண் தோழர்களுக்கு வழி அனுப்பி விழாக்களையும் - பெண்களே ஏற்பாடு செய்து நடத்தினர்.

பின்னர் போராட்டம் தீவிரமானபோது, பெண்களே நேரடியாகப் பேராட்டக்களத்தில் குதித்துக் கைதானார்கள். பெண்களின் முதல் போராட்ட அணி 1938 நவம்பர் 14 ஆம்தேதி சென்னையில் கைதானது; அதில் டாக்டர்.தர்மாம்பாள், இராமாமிர்தம் அம்மையார்,பட்டம்மாள், சீதம்மாள் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ( குடி அரசு 1938 நவம்பர் 30 )

பாரதி தாசனின் இந்தி எதிர்ப்புப் போர்ப்படைப்பாடலைப்பாடிக்கொண்டு, பெத்துநாயக்கன் பேட்டையில் உள்ள காசிவிசுவநாதன் கோயிலில் இருந்து இந்து தியாலாஜிக்கல் பள்ளி வரை - இந்தப் பெண்கள் அணி ஊர்வலமாகச் சென்றது. வழியில் பல இடங்களில் இந்தி எதிர்ப்பாளர்கள் அவர்களை வரவேற்று மாலைகள் அணிவித்தனர். பள்ளி முன் மறியலுக்குச் சென்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்திக்கைது செய்தனர். அவர்களுக்குநீதிபதி 6 வார சிறைத் தண்டனை விதித்தார் ; அபராதம் கட்டி விடுதலைஆகிறீர்களா ? அல்லது சிறைக்குப் போகிறீர்களா ? என்று நீதிபதி கேட்டபோது - அவர்கள் சிறைக்குப் போவதையே விரும்பி ஏற்றனர்.

அதுமுதல் - அவ்வப்போது பெண்கள் போராட்ட அணிகள் களத்தில் வந்து கொண்டே இருந்தது. 1934 செப்டம்பர் 5 இல் கடைசிப் பெண்கள் அணி கைதானது. மொத்தம் 73 பெண்கள் இந்தியை எதிர்த்து மறியல் களத்தில் இறங்கி கைது செய்யப்பட்டபிறகு, சிறையில் அடைக்கப்பட்டார்கள். இதிலே மிகவும் குறிப்பிடப்படவேண்டியது - பல பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளுடன் சிறை புகுந்ததாகும்.

மொத்தம் 32 குழந்தைகள், தங்கள் தாய்மார்களுடன் சிறையிலிருந்தனர். ( நூல் . தமிழன் தொடுத்த போர்.இளஞ்செழியன் ) போராட்டத்தைக் கண்டு நிலைகுலைந்து விரக்தி அடைந்த ஒரு காங்கிரஸ்அமைச்சர் இப்படிக் குழந்தைகளுடன் பெண்கள் சிறை புகுவதைக் கேலி பேசினார். தங்கள்குழந்தைகளுக்கு சிறையில் பால் கிடைக்கும் என்பதால்தான் இவர்கள் குழந்தைகளுடன் சிறைக்குப் போகிறார்கள் என்றார். சுயமரியாதை இயக்கப் பெண்கள் இந்தப் பேச்சைக் கேட்டுக் கொதிப்படைந்தனர். 1938 இல் வேலூரில் நடந்த சென்னை மாகாணப் பெண்கள் மாநாட்டில் - அமைச்சர் தனது கூற்றைத் திரும்பப் பெறுவதோடு நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.( குடிஅரசு.1938 டிசம்பர் 28 )

சுயமரியாதை இயக்கத்தின் பத்திரிக்கையான குடிஅரசு பெண்கள் போராட்டத்தில் பங்கெடுத்த செய்திகளை மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது ; நீதிமன்றத்தில் இந்தப் பெண்கள் வாதிட்ட விவரங்களை முழுமையாக வெளியிட்டதோடு அவர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டது. இந்தப் போராட்டத்தில் பெரியார் கைது செய்யப்பட்டதற்குக் கூட - பெண்களைத் தூண்டிவிட்டு சிறைக்கு அனுப்பினார் என்றே குற்றம் சாட்டப்பட்டது. நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞருக்கும் - ஒரு பெண்ணூக்கும் நடந்த உரையாடலைக் கீழே தருகிறோம்.

அரசு வழக்கறிஞர் : நீங்கள் கைகுழந்தைகளுடன் இருக்கிறீர்களே ; சிறையிலே இருப்பது மிகவும் அவதியானது ;உங்கள் கணவரும் இதனால் பாதிக்கப்படுவார் நன்றாக யோசியுங்கள் ; இனிமேல் - இப்படி எதிர்காலத்தில்செய்யமாட்டேன் என்று கூறிவிட்டால் நாங்கள் மன்னித்து விடுகிறோம்.

கைதான பெண் : எங்கள் மொழியின் வளர்ச்சிக்கும், நாட்டின் உயர்வுக்கும் எந்த சங்கடத்தையும் நாங்கள் தாங்கிக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். இதிலே தலையிடுவதற்கு எங்கள் கணவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.அதற்காக அவர்கள் கவலைப்படுபவர்களும் அல்ல ( குடிஅரசு 1938 நவம்பர் 25 )

நன்றி: ச.ஆனந்தியின் பெண்ணுரிமையும் பெரியாரும்என்ற நூல்

வாசலில் சாணி தெளிப்பது, கோலம் போடுவது, வீட்டைக் கூட்டிப் பெருக்குவது, சமையல் செய்வது, திருமணம் செய்வது, நாய்க்கு லைசன்ஸ் கட்டுவதைப் போல தாலியைத் தூக்கிக்கொண்டு திரிவது, பின்தூங்கி முன் எழுவது, கூட்டுக்குடும்பத்தைப் பேணிக்காப்பது, பிள்ளை பெறுவது, அவர்களை வளர்ப்பது, பிறகு அடுத்த தலைமுறையையும் வளர்த்தெடுப்பது என்பது போன்ற சங்கிலித் தொடர் வேலைகளில் இருந்து பெண்கள் இப்போது தான் மெல்ல மெல்ல வெளியேறத் தொடங்குகிறார்கள். அதுபற்றி சிந்திக்கிறார்கள். விவாதிக்கிறார்கள். இந்தச் சூழலில் ஒரு இப்படி ஒரு திராவிடர் பண்பாட்டை வளர்க்கும் செயல்களைத் திட்டமிட்டால் நல்லது. வேண்டுமானால் இவற்றை தமிழ்ப்பண்பாடு என்றுகூட சொல்லிக்கொள்ளுங்கள்.

இவ்வாறு இந்துமதம் அந்தக்காலக்கட்டத்தில் பெண்களுக்கென ஒதுக்கிவைத்திருந்து இடத்திலிருந்து பெண்களை அகற்றி, ஒரு வளர்ச்சிச் நோக்கிய பாதையில் பயணிக்கச்செய்தவர் பெரியார். இந்துப்பண்பாடு பெண்களுக்கு என்று விதித்திருந்த அனைத்துக் கடமைகளில் இருந்தும் பெண்களை விடுவிக்கப் போராடியது திராவிடர் இயக்கம். இப்படிப்பட்ட சமுதாயப் புரட்சி இயக்கத்தின் தலைவரான பெரியாரையும், மாபெரும் விடுதலை இயக்கத் தலைவரான பிரபாகரனையும் தமது வழிகாட்டிகளாகச் சொல்லிக்கொள்ளும் நாம் தமிழர் கட்சியினர் கோலப்போட்டிகளை நிறுத்த வேண்டும். தோழர் கொளத்தூர் மணி, தோழர் சீமான், தோழர் பண்ருட்டி வேல்முருகன் ஆகியோர் பொறுப்பாளர்களாக உள்ள உதைக்குத்துக் கழகத்தின் மேற்பார்வையில் பெண்களுக்கிடையேயான கிக் பாக்ஸிங் உதைக்குத்துப்போட்டிகளை நடத்துவதே தற்காலத் தேவை. இல்லை இல்லை கோலம் என்பது தமிழர் கலை என்கிறீர்களா? பரவாயில்லை அந்தக் கோலப்போட்டியை ஆண்களுக்கு நடத்துங்கள். ஆண்களுக்கிடையேயான சமையல் போட்டியை நடத்துங்கள். சமுதாயத்தைப் பின்னோக்கி இழுக்க வேண்டாம்.

திராவிடர்களுக்கு எதிரான 7 ஆம் அறிவு

பழந்தமிழன் யார்? அவன் கொள்கை என்ன? அதற்கு ஆதாரம் என்ன? அதற்கு இன்று அவசியம் என்ன? - என்பது போன்ற கேள்விக்குப் பதில் சொல்ல இன்று ஆளைக் காணோம். வீணாக, அந்தப் பேரில் பிழைக்கவோ, பெருமைப்படவோ, மக்களைச் சுரண்டவோ தங்கள் எண்ணத்திற்கு பயன்படுத்திக் கொள்ளவோ பயன்படுத்தப்படுகிறதுஎன்றார் பெரியார். அப்படி பழந்தமிழர் பெருமை என்று ஒன்றைச் சொல்லி மக்களைச்சுரண்டும் முயற்சியே 7 ஆம் அறிவு.

தமிழனின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றும் 7 ஆம் அறிவு என்று பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் பிரம்மாண்டமான விளம்பரங்கள். சமூக வலைத்தளங்களில் பரபரப்பான விவாதங்கள். நீங்கள் எவ்வளவு எதிர்பார்ப்போடு வந்தாலும் அதுக்கும் மேலே, அதுக்கும் மேலே தான் படம் இருக்கும்என்று ஏ.ஆர்.முருகதாசின் விளம்பரம். அறிவுப்பூர்வமாக சிந்தித்துச் செயல்படும் ஒரு பெண்ணை நம் கண்முன் காட்டிய எங்கேயும் எப்போதும் என்ற ஒரு இயல்பான படத்தைத் தயாரித்தவர் என்பதால் அது போன்ற ஒரு பாமரத்தனமான ஆசையுடன் 7 ஆம் அறிவுக்குச் சென்றோம்.

5 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் இருந்து சீனா சென்ற போதிதர்மன் பற்றிய ஒரு கதை. தமிழர்களின் பெருமையை உலகிற்கு பறை சாற்றினான், சாலின் குங்ஃபூ கலையை உலகிற்கு அறிமுகப்படுத்தினான், தமிழ் மருத்துவத்திற்குப் பெருமை சேர்த்தான் என்றெல்லாம் ஏகப்பட்ட பில்ட் அப்கள். மிக முக்கியமான உண்மை என்னவென்றால் போதி தர்மன் தமிழனே இல்லை என்பதுதான்.

திரைப்படக்குழுவினர் சொல்லும் கதைப்படியான போதிதர்மன் சீனா சென்ற காலம் கி.பி. 520 அல்லது 525. அந்தக்காலக்கட்டத்தில் பல்லவ நாடு சுதந்திர நாடாக இயங்கி வந்தது. அதற்கு அருகாமை நாடுகளான சேர, சோழ, பாண்டிய நாடுகளை களப்பிரர்களும், பல்லவ நாட்டுக்கு வடக்கே இரேணாட்டு தெலுங்குச் சோழர்களும் அரசாண்டனர். போதி தர்மனின் இயற்பெயர் புத்தவர்மன். இவன் ஸ்கந்தவர்மன் என்ற பல்லவ அரசனுக்கு மூன்றாம் மகன் என்று சொல்லப்படுகிறது. அப்போதைய தமிழ் மன்னர்களின் பெயர்கள் நெடுஞ்செழியன், கரிகாலன், செங்குட்டுவன், இளந்திரையன் என்பது போல சுத்தத் தமிழ்ப்பெயர்களில்தான் இருந்தன. போதி என்ற வடமொழிச் சொல்லுக்கு அரச மரம் என்று பொருள். ஸ்கந்தவர்மன் என்றோ, போதி வர்மன் என்றோ, குமாரவிஷ்ணு, சிம்ம விஷ்ணு என்றோ வடமொழிப் பெயரை தமிழ் மன்னன் சூடிக்கொள்ள அப்போது வாய்ப்பில்லை. பல்லவர்கள் தமிழர்களே அல்ல வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பது தான் பல வரலாற்று அறிஞர்களின் ஆய்வுமுடிவு. பல்லவர்களின் மொழி ப்ராகிருதமும், சமஸ்கிருதமுமே. அவர்களின் செப்பேடுகளும் கல்வெட்டுக்களும் ப்ராகிருதத்திலேயே உள்ளன. அவர்களின் ஆட்சிமொழிகள் வடமொழிகளே.

சில வரலாற்றுக் குறிப்புகள் போதி தர்மன் ஒரு பார்ப்பன குறுநில மன்னனுக்குப் பிறந்தவன் என்றுதான் குறிப்பிடுகின்றன. கருஞ்சட்டைத் தமிழன் 23.04.10 இதழில் தோழர் எழில்.இளங்கோவன் அவர்கள்,

முதன்முதலாக சாரிபுத்தனும், மவுத்கல்யாயனாரும் புத்தத்தில் சேர்ந்தார்கள். தொடர்ந்து பார்ப்பனர்கள் பவுத்தர்களாக மாறி புத்தருடன் சேர்ந்தார்கள். விளைவு...?

புத்தர் மறைந்தபின் கூடிய இரண்டாம் பவுத்தமகா சபையில் பவுத்தத்தை இரண்டாக உடைத்தார்கள் வஜ்ஜியர்கள் என்ற பார்ப்பன பவுத்தத் துறவிகள். படிப்படியாகப் புத்தரின் சமூகச் சிந்தனை, பகுத்தறிவு, சுய சிந்தனைக் கொள்கைகள், கடவுள் மறுப்பு, பூசை, சடங்குகள் புறக்கணிப்பு போன்ற அனைத்தும் மாற்றப்பட்டன. புத்தரையே கடவுள் ஆக்கினார்கள். புத்தரின் சமூக எழுச்சிக்கான போர்க்குணத்தை மறைத்து, ஒழுக்கமாக இருப்பவனே பவுத்தன் என்று சீல உபதேசங்களை நுழைத்து விட்டார்கள்.

பின்வந்த காலங்களில் சங்கமித்திரர், ஆச்சாரிய புத்ததத்தர், கணதாசர், வேணுதாசர், போதி தருமர், தருமபாலர், ஆச்சாரிய திக்நாகர், ஆச்சாரிய தருமபாலர், தம்மபாலர் போன்ற பலப்பல பார்ப்பனர்கள் பவுத்தத் துறவிகளாக மாறி, புத்தரின் நேரடி பவுத்தத்தை மாற்றி அமைத்தார்கள். கி.பி.2 ஆம் நூற்றாண்டில் நாகார்ஜுனர் என்பவர், புத்தருக்கு நேர் எதிரான ஆரியவாதத்தைச் சூனியவாதமாகச் சொல்லி மகாயான பவுத்தம் என்றார். பவுத்தம் வீழ்ந்தது

இவ்வாறு தோழர் எழில் இளங்கோவன் சொல்வது மட்டுமல்ல. கேரளாவில் களரிப்பட்டு அல்லது களரிப் பாயாட்டு என்ற கலையை பயிற்றுவிக்கும் பல பயிற்சி மையங்கள் உள்ளன. அவற்றின் விளம்பரங்களில் களரிப்பாயாட்டுக் கலையை உருவாக்கிய போதி தர்மன் ஒரு மலையாளி என்றும் (அப்போது சேர நாடு) ஒரு பார்ப்பன மன்னனுக்கு மூன்றாவதாகப் பிறந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஆதாரம்: http://maruthikalari.org/english/kalari.htm

இந்தத் தளம் மட்டுமல்ல திரைப்படக்குழுவினர் சொன்னபடி தேடினால் போதி தர்மன் ஒரு தமிழன் அல்ல. ஒரு சேர நாட்டுப்பார்ப்பான் அல்லது வடநாட்டுப் பார்ப்பான் என்பதற்கே ஆதாரங்கள் உள்ளன.

பௌத்த மார்க்கத்திலிருந்து வேறுபட்ட தியானமார்க்கத்தைத்தான் போதிதர்மன் சீனாவில் போதித் துள்ளான். சீனாவில் சான் மதமாகவும், ஜப்பானில் ஜென் மதமாகவும் மக்களால் கடைபிடிக்கப்படுகிறது. இவை இந்து மதத்தைக் கட்டி எழுப்பிய சங்கரரின் அத்வைதக் கோட்பாடுகளுக்கு நெருக்கமாக உள்ளன. ஜப்பானிலும் இந்தியாவில் உள்ளது போன்ற ஒரு ஏற்றத்தாழ்வு நிலை, சாதி போன்ற ஒரு ஒடுக்குமுறை வடிவம் சில பகுதிகளில் இன்றும் உள்ளன.

ஆக புத்த மதத்தை ஒழிக்க சில பார்ப்பனர்கள் அந்த மதத்துக்குள்ளேயே புகுந்து அது பரவிய இடங்கள் எல்லாவற்றிற்கும் தாங்களும் பரவி அழித்துள்ளார்கள். பகையாளி குடியை உறவாடிக் கெடுஎன்று கிராமங்களில் சொல்வார்கள். அப்படி ஒரு வேலையைப்பார்த்த நயவஞ்சகனை கதாநாயகனாக உலவ விட்டுள்ளார் முருகதாஸ்.

தன் பெயரில் உள்ள A.R என்ற இரு ஆங்கில எழுத்துக்களைக்கூட எடுக்க முடியாத முருதாஸ், தமிழுக்காக நீட்டி முழங்குவது நல்ல காமெடி. இலங்கையில் 7 ஆம் அறிவு படத்தை திரையிட வேண்டு மென்றால் இலங்கையைக் குறிக்கும் சில வசனங்களை நீக்க வேண்டும் என்று அந்த அரசு நிபந்தனை விதித்தது. இந்தப் படத்தில் ஒரே ஒரு நல்ல விசயம் என்று பலரும் குறிப்பிட்ட அந்த வசனங்களை நீக்கி விட்டுத்தான் இலங்கையில் 7 ஆம் அறிவு வெளியாகி உள்ளது. ஆனால் அப்பாவி ஐரோப்பியத் தமிழர்களிடமும் தமிழ்நாட்டுத் தமிழர்களிடமும் கல்லா கட்டுவதற்கு திருப்பி அடி என்பது போன்ற வசனங்கள். திருப்பி அடி என்று என்று சொல்பவர்கள் எல்லோருமே இப்படித்தானோ? இடஒதுக்கீடே இல்லாத ஐ.ஐ.டி யில் நின்று கொண்டு இடஒதுக்கீட்டால்தான் நாடு கெட்டுவிட்டதுஎன்று வசனம் பேசியதற்காக அந்த வசனத்தை நீக்கினால்தான் இங்கு அந்தப் படம் ஓடும் என்று ஒரு கலகக்குரல் எழுப்ப யாரும் தயாராக இல்லை.

எனக்கு மதப்பற்றோ, மொழிப்பற்றோ, இனப்பற்றோ சிறிதும் இல்லை என்றவர் பெரியார். மதமாற்றம், மொழி மாற்றம், இனமாற்றம் அனைத்தும் தவறு என்கிறது இப்படம். தமிழ்தேசியத்திற்கும், இந்து தேசியத்திற்கும் உள்ள ஒற்றுமை இது தான். அதனால்தான் அத்வானி இராமேசுவரம் மீனவர்களைப் பற்றியும். ஈழத்தமிழர்களைப் பற்றியும்கூட பேச முடிகிறது. பரமக்குடியைப் பற்றி இரு தரப்புமே பேச முடிவதில்லை. இந்து மக்கள் கட்சியும், இந்து முன்னணியும், பாட்டாளி மக்கள் கட்சியும் காதலர் தினத்தை எதிர்க்க முடிகிறது. அகநானூற்றுக் களவியல் பண்பாட்டின் நீட்சிதான் காதலர் தினங்கள் என்று தமிழர்களின் பழம்பெருமையை மீட்கக்கூட ஒரு தமிழ்தேசிய அமைப்பும் வரமுடியவில்லை.

வீட்டுக்கு முன்பு மாட்டுச்சாணியால் வாசல் தெளித்து, கோலம் போட்டு, தலைவாசலின் நிலைக் கதவின் கீழே மஞ்சளும் குங்குமமும் வைத்து, வீட்டுக்குப் பின்னே துளசிச்செடியும் இருப்பது யாருடைய வீட்டில்? பார்ப்பனர்களுடைய வீட்டில் தான் இவை தவறாமல் நடக்கும். அந்த பார்ப்பன வாழ்வியலைத் தான் தமிழர்களுக்கு முன்மாதிரியாக, கடைபிடிக்க வேண்டிய கடமையாக முழுங்குகிறார் முருகதாஸ். இதைத் தான் இந்துமுன்னணிக்காரன் பேசுறான், சங்கராச்சாரி பேசுறான். இந்த சாணி, மஞ்சள், துளசி கதைகளை பக்தியாகச் சொல்லக் கூடாதாம்! அறிவியலாகச் சொல்ல வேண்டுமாம்! அந்தப் பித்தலாட்ட அறிவியலைத்தானே ஜக்கி வாசுதேவும், வேதாத்திரி மகரிஷியும், ரவிசங்கரும், நித்தியானந்தாவும் அவரவர் ஸ்டைலில் ஹைடெக்காக சொல்லி பல தலைமுறைகளுக்குச் சொத்து சேர்த்துள்ளார்கள்?

சாணியில் கூட பசுமாட்டுச்சாணி, எருமை மாட்டுச்சாணி என்று பிரிவினையை வைத்திருக்கும் சமுதாயத்தில், எந்தப் பார்ப்பானும் மறந்தும்கூட ஒரு எருமை மாட்டை வளர்க்காத நாட்டில், எந்தப் பார்ப்பன அக்ரகாரத்திலும் வாசலில் தவறிப்போய்கூட எருமைச்சாணியைப் பயன்படுத்தாத சூழலில் எங்களுக்குச் சாணி என்றால் சாணிப்பாலும் சவுக்கடியும் தான் நினைவுக்கு வருமே ஒழிய, அதை மருந்தாகப் பார்க்க முடியாது. இப்பத்தான் இந்தத் தலைமுறைதான் சாணியையும் மாட்டையும் ஒதுக்கிவிட்டு கம்ப்யூட்டரையும், கல்லூரிகளையும் பார்க்கிறோம். இன்றும் எங்கள் அப்பன், பாட்டன் வீடுகளில், வீட்டுக்கு முன்புறம் மட்டுமல்ல, வீடு முழுவதற்குமே சாணித்தரைதான். அதுவும் வாரம் ஒரு முறை ஃப்ரெஷ் சாணி. எந்த நோயையும் அந்த சாணித்தரை தடுக்கவில்லை. இப்பத்தாண்டா மொசைக் தரையவே பாக்குறோம். அது ஒங்களுக்குப் பிடிக்கலயா? நீங்க மட்டும் ஐ.ஐ.டி யில ப்ராஜெக்ட் எழுதி அமெரிக்காவுக்கும், சீனாக்கரனுக்கும் அனுப்புவீங்க, நாங்க சாணியிலயும், சகதியிலயும் சாகனுமா?

வாசல் தெளித்து, கோலம்கூட போட மாட்டிக்கிறாஎன்று சராசரி ஆண்களால் குற்றம் சாட்டப்பட்டு, பல பெண்களின் வாழ்க்கை விவாகரத்து வரை போய்க்கொண்டு இருக்கிறது. கோலம்கூட போடத் தெரியாதா? என்ற கேள்வி இன்றும் பல பெண்களுக்கு சங்கடத்தை உருவாக்கியே வருகிறது. இது ஒரு இந்து உளவியல். இந்து வாழ்வியல். தட்டுத்தடுமாறி ஒடுக்கப்பட்ட சமுதாயம் மேலே வந்துகொண்டிருக்கிறது. கம்ப்யூட்டர் நிறுவனங்களில் பணிபுரியத் தொடங்கியிருக்கிறது. வெளிநாடுகளுக்குப் போய்வரத் தொடங்கியிருக்கிறது. அதைப் பொறுக்க முடியாத பார்ப்பனக்கூட்டம் வெளிநாட்டுக்கு வேலைப் போகலாமா? இந்தியாவைக் காப்பது யார்? பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்யலாமா? இது முதலாளித்துவ ஆதரவு இல்லையா? ஐ.ஐ.டி யில் இடஓதுக்கீடு வைக்கலாமா? இதனால் தகுதி திறமை பாழாகாதா? எல்லோரும் கம்ப்யூட்டர் தொழிலுக்கு வந்துவிட்டால் நமக்கு உணவழிப்பது யார்? நாம் விவசாயத்தைப் பார்ப்போம், அதுவும் (சாதியிலிருந்து மீடேறவே முடியாத) இயற்கை விவசாயம் பார்ப்போம் என்றெல்லாம் போதனைகளைத் தொடங்கியிருக்கிறது. அதன் தொடர்ச்சிதான் இந்த துளசி, சாணி, மஞ்சள், கோலப் பிரச்சாரங்கள்.

தமிழனே அல்லாத, தமிழர்களுக்கு - திராவிடர்களுக்கு எதிரியான ஒருவனைக் காட்டி தமிழர்களுக்கு - திராவிடர்களுக்கு எதிரான ஆரியப் பண்பாட்டைத் திணிக்கும் முயற்சியே 7 ஆம் அறிவு.

பழந்தமிழர் பெருமை குறித்த தோழர் பெரியாரின் விளக்கம் இதோ,

பழந்தமிழன் யார்? அவன் கொள்கை என்ன? அதற்கு ஆதாரம் என்ன? அதற்கு இன்று அவசியம் என்ன? - என்பது போன்ற கேள்விக்குப் பதில் சொல்ல இன்று ஆளைக் காணோம். வீணாக, அந்தப் பேரில் பிழைக்கவோ, பெருமைப்படவோ, மக்களைச் சுரண்டவோ தங்கள் எண்ணத்திற்கு பயன்படுத்திக் கொள்ளவோ பயன்படுத்தப்படுகிறது.

பழந்தமிழன் யாராயிருந்தால் எனக்கென்ன? உங்களுக்குத் தான் என்ன காரியமாகும்? அவன் கொள்கையோ, மதமோ, கடவுளோ, நடப்போ, சக்தியோ எதுவாயிருந்தால் தான் இங்கு இன்று நமக்கு என்ன லாபம் ? என்பது தான் எனது கேள்வி.

பழந்தமிழர் நிலையைப் பற்றிப் பேசுபவர்கள் பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுக்கும் அறிவாளிகளானால், நடுநிலைக் காரர்களானால், அவர்களை ஒன்று கேட்கிறேன். அதாவது காட்டுமிராண்டி வாழ்க்கைக் கால மனிதனை விட கல்லாயுத கால வாழ்க்கை மனிதன் சிறந்தவன் அல்லவா என்பதும், அது போலவே 4000, 5000 வருடத்திற்கு முன் இருந்த மனிதனை விட இன்று இருபதாவது நூற்றாண்டில் வாழும் மனிதன் சிறிதாவது மேலான அனுபவம் பெற சவுகரியமும், ஆராய்ந்து பார்க்கும் வசதியும் உடையவனா? அல்லவா? என்பதோடு அந்தக் காலத்தில் வாழ்ந்த வாழ்வை விட, எண்ணிய எண்ணத்தை விட வேறான வாழ்வும், வேறான எண்ணங்களும் கொள்ள வேண்டியவனாய் இருக்கின்றானா இல்லையா என்பதேயாகும்.

இன்று வாழும் மனிதனுடைய எந்தக் காரியத்திற்கு பழந் தமிழனுடைய வாழ்க்கைக் குறிப்பும் நினைவுக் குறிப்பும் நமக்கு வேண்டியிருக்கிறது என்று உங்களை வணக்கமாய்க் கேட்கிறேன்.

வீணாக பழந்தமிழர் கொள்கை என்பதும் பழந்தமிழர் வாழ்க்கை நிலை என்பதும் அந்நியன் ஏய்க்கவோ, அறியாமையில் மூழ்கவோ தான் பயன்படுத்தக் கூடியதாக ஆகி விட்டது.

இனி நம்முடைய எந்த சீர்திருத்தத்திற்கும் அந்தப் பேச்சு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது பகுத்தறிவுவாதியின் கடமையாக ஆகி விட்டது. பழந்தமிழன் வந்து போதிக்கத் தகுந்த நிலையில் இன்று நமது மனித சமூகம் இல்லை.

பழந்தமிழன் கொள்கை எதுவும் இன்று எந்த மனித சமூகத்திற்கும் அவசியமும் இல்லை. மனிதன் காலத்தோடு, மாறுதலோடு, செல்ல வேண்டிய வனே யொழிய வேறில்லை. வேண்டுமானால் மடையர்களைத் தட்டி எழுப்ப ஆயுதமாக அதைக் கொள்ளலாம். ஆனால் சாதுமக்களை ஏமாற்ற அதைப் பயன்படுத்த விடக் கூடாது’’

வாழ்க்கைத் துணை நலம்என்ற நூலில் 6,7 ஆம் பக்கங்கள்